districts

img

விவசாயிகள் சங்க வட்ட அலுவலகம் திறப்பு

கிருஷ்ணகிரி, ஆக.26- தமிழ்நாடு விவசாயிகள் சங்க சூளகிரி வட்டம் அலுவலகத்தை சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பெருமாள் திறந்து வைத்தார். சங்கத்தின் வட்டப் பொருளாளர் எம்.எம். ராஜூ சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்டத் தலைவர் முருகேஷ், செயலாளர் முருகேசன், மலைவாழ் மக்கள் சங்க வட்டத் தலைவர் குண்டப்பா மாவட்ட குழு உறுப்பினர் முரளி கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுரேஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி, விவசாயிகள் சங்க ராயக்கோட்டை கிளைத் தலைவர், துர்வாசன் வாழ்த்திப் பேசினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், ஓபே பாளையம் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், துப்பு காண பள்ளியில் வீடற்ற குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வேண்டும், அரசு தட்சிண திருப்பதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு வழங்கிய உண்மை யான 16 பட்டாக்களை வாங்கிச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக அதை மலைவாழ் மக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். சங்கத்தின் வட்ட தலைவர் அகமத் பாஷா, செயலாளராக டி.முரளி, பொரு ளாளராக எம். நாராயணாயப்பா தேர்வு செய்யப்பட்டனர்.