மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே.நகர் 38ஆவது வட்டத்தில் தோழர் நல்லுசாமி நினைவு அலுவலகத் திறப்பு விழா கதிரவன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, நிர்வாகிகள் சேகர், ஜெயன், சரவணன், விஜய், ஷாஜகான், வி.கே.கோவிந்தசாமி, ந. திருமுருகன், மகேந்திரன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.