சிதம்பரம், மே. 11- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கிராமப்புற வளர்ச்சி க்கான மையத்தில் ஊரக வளர்ச்சி சங்கம் துவக்க விழா மற்றும் செஞ்சி லுவை சங்கத்தின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் பங்கே ற்று பேசிய முதல்வர் விஜயராணி, “அண்ணாமலைப் பல்லைக்கழம் மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நுட்ப அடிப்படையில் பல்வேறு வசதி களை பல்கலைக் கழக நிர்வாகம் செய்துகொடுத்துள்ளது. இதனை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார். வேளாண் விரிவாக்கத் துறையின் இணைப்பேராசிரியர் ராஜ்பிரவீன், திறன் மேம்பாட்டு இயக்ககத்தின் இணை இயக்குநர் சுனில் பிராங்க்ளின், பல்கலைக்கழக கலைப் பண்பாட்டுமன்ற செயலர் எஸ்தர்பிரதீபா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.