districts

img

கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்

சென்னை, ஆக.18- சென்னையில் கடலோர காவல்படை யின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய புதிய கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிறன்று சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள  கடற்படையின் கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் திறந்து வைத்தார். இது இந்திய கடலோரப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசரகால நட வடிக்கைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றும். மேலும்  கடலில் ஆபத்தில் உள்ள படகுகள், மீனவர்க ளுக்கான கடல்சார் மீட்பு நடவடிக்கை களின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் இந்த அதிநவீன வசதி கடல்வாழ் உயிரி னங்களை பாதுகாப்பதற்கும், முக்கிய மான சூழ்நிலைகளில் விரைவான நட வடிக்கையை உறுதி செய்வதற்கும் பயன்படும். சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள கடலோர காவல்படையின் மண்டல கடல் மாசகற்று மையம் கடல் மாசு மேலாண்மையில் ஒரு முன்னோடி யாக விளங்குகிறது. இந்தப் பிராந்தியத்தில் கடலோர மாநிலங்களை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில், குறிப்பாக எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவுகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும். புதுச்சேரியில் உள்ள கடலோர காவல்படை விமானத்தள வளாகம் இந்திய கடலோர காவல்படைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. புதுச்சேரி மற்றும் தென் தமிழக கட லோரத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இது பயன்படும். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய சென்னை மக்க ளவை உறுப்பினர் தயாநிதி மாறன், கட லோர காவற்படையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.