districts

img

பெருங்குடி குப்பை கிடங்கில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

சென்னை, ஏப். 28 - பெருங்குடி குப்பை கொட்டும் வளா கத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை வியாழனன்று (ஏப்.28) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது: பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் 225 ஏக்கர் பரப்பளவு கொண் டது. மாநகராட்சியின் 9 முதல் 15  வரையிலான மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு எஞ்சிய குப்பைகள் இங்கு சேகரிக் கப்படுகிறது. இங்கு 25 ஆண்டுக ளுக்கும் மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் திடக்கழிவுகள் பயோ  மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும். இந்த வளாகத்தில் ஏப்.27 அன்று  பிற்பகலில் தீ பிடித்தது. தீ அணைக்கப் பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் தரமணி ஆகிய 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாம்கள் மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, துணை மேயர் மு.மகேஷ்குமார், தீய ணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்கு நர் பி.கே.ரவி, மாநகராட்சி ஆணையா ளர் ககன்தீப் சிங் பேடி, மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.