சென்னை,ஜூன் 17-
சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் நிலையம் மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு இடையே திறந்த வெளியில் தண்டவாளம் அமைத்து அதன் மேல் மின்சார ரயில் பெட்டி நிறுத்தி வைக்கப் ்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சென்ட்ரல் சதுக்கம், நடைபாதைகள், ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளை கவரும் வகையில் மின்சார ரயில் பெட்டி ஒன்று பயணிகள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக் கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது. சிலர் ரயில் பெட்டி அருகே நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.