districts

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை

சென்னை,டிச.27-  சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் மூடப்பட உள்ளன. சுமார் 500 இடங்க ளில் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றி வரு வார்கள். மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதி களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். புத்தாண்டு அன்று வாழ்த்து சொல்வதாக கூறிக்கொண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.  நட்சத்திர ஓட்டல்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் வியாழனன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். நீச்சல் குளங்கள் இருக்கும் பகுதியை மூடி வைத்து தேவையான அளவுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வும் போலீசார் அறிவுறுத்தி உள்ள னர். கொரோனா வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.