பெரியபாளையம்,ஆக.2-
பெரியபாளையம் அருகே உள்ள வேம்பேடு கிராமத்தில் அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இதை எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் மண் குவாரிக்கு கீழானூர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பிரேம்குமார் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோதண்டன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி புதனன்று பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கீழானூர் ஊராட்சி தலைவியாக உள்ளது குறிப்பிடத் தக்கது.