districts

img

மருத்துவ காப்பீட்டு திட்ட பட்டியலில் அரசு மருத்துவமனைகளையும் இணைத்திடுக! ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 1 - மருத்துவக் காப்பீடு திட்டப் பட்டியலில்  அரசு மருத்துவமனைகளையும் இணைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கம்  வலியுறுத்தி உள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டம் - 2022 குறித்த கருத் தரங்கம் திங்களன்று (பிப்.28) சென்னையில் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கம் இந்த கருத்த ரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கில் பேசிய தலைவர்கள், அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம்  ஜூன் மாதத்தோடு முடிய வுள்ளது. இந்த திட்டம்  ஜூலை 1ந் தேதியிலிருந்து புதுப்பித்து அமல்படுத்தப் பட உள்ளது. இத்திட்டத் தில் அரசு மருத்துவமனை களையும் இணைக்க வேண்டும். கட்டணமில்லா சிகிச்சை எனக் கூறப்பட்டா லும், வைப்புத் தொகையை பெற்றுக் கொண்டே சிகிச்சை  அளிக்கப்படுகிறது. இதனை மாற்றி, பணமில்லா  மருத்துவமாக இத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி னர். இந்த திட்டத்தில் ஓய்வூதி யர், காப்பீடு வழங்கும் யுனைடெட் இந்தியா நிறுவனத்திற்கும் இடையே மூன்றாம் தரப்பினரை நிய மிக்க கூடாது. இந்த திட்டத் ்தில் சேரவும், விலகவும் அனு மதிக்க வேண்டும். மேலும்,  முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உள்ள நடை முறைகளைஇணைக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி போன்று சிறப்பு ஓய்வூதி யர்களை இத்திட்டத்தில் கட்டணமின்றி இணைக்க வேண்டும், அதிகாரம் பெற்ற குழுவில் உள்ள  அதிகாரிகள் பரிந்துரை களை காப்பீட்டு நிறுவனம் நிராகரிக்கக் கூடாது என்றும்  தலைவர்கள் வலியுறுத்தி னர். கருத்தரங்கிற்கு சங்கத் தின் மாநிலத் தலைவர்  நெ.இல. சீதரன் தலைமை  தாங்கினார். பொதுச் செயலா ளர் பி. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் என். ஜெயச் சந்திரன், நிர்வாகிகள் த. குப்பன், குரு. சந்திரசேகரன், கி. இளமாறன், நாதன் உள்ளிட்டோர் பேசினர்.