districts

மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் 150 நாள் பணி வழங்க வலியுறுத்தல்

மதுராந்தகம், நவ.28- மகாத்மா காந்தி ஊரக வேலை  திட்டத்தில் 150 நாள் பணி வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மதுராந்தகம்  வட்ட மாநாடு ஞாயிறன்று (நவ.27) வட்டச் செயலாளர் வி.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா பேசினார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்டச்செயலாளர் எம்.nஜகன்நாதன், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் தினேஷ், விவசாய சங்க வட்டச் செயலாளர் பாலாஜி, மாதர் சங்க வட்டத் தலைவர் வனிதா,  செயலாளர் இந்திரா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஊரக  வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், பயனாளிகளுக்கு  நாள் ஒன்றுக்கு ரூ600  ஊதியமாக வழங்க வேண்டும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு 100 நாள் வேலை அட்டையில்  சம்பளம், மற்றும் சிமெண்ட் கம்பி பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை  உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 10 பேர் கொண்ட வட்டக்குழுவின் தலைவராக  ஜி.தனசேகர், செயலாளராக  வி.சசிகுமார், பொருளாளராக  எம்.குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.