districts

img

தாம்பரம் மாநகராட்சியில் சிபிஎம் 2 இடங்களில் போட்டி

சென்னை, பிப். 1 - தாம்பரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 வார்டுகளில் போட்டியிடுகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பி னர் க.பீம்ராவ், திமுக  சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ்.ஆர்.ராஜா,  இ.கருணாநிதி (திமுக)  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 28, 61 ஆகிய இரு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன்படி 28ஆவது வார்டில்  கட்சியின் பல்லாவரம் தொகுதிக்குழு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமியும், 61ஆவது வார்டில் தேவ நேசன் நகர் கிளை உறுப்பினர் விஜயா ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.