கடலூர், ஜன.9- போக்குவரத்து தொழி லாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். கடலூர் பணிமனையில் இருந்து குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப் பட்டன. போக்குவரத்து பணி மனை முன்பு தொழிற் சங்கத்தினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் கொணவட்டம் பணிமனை 1, 2 மற்றும் கிருஷ்ணா நகர் பணிமனை களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் உள்ள பணிமனையில் திரண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சிஐடியு மண்டல தலைவர் அ.சேகர், தலைமையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை-காஞ்சிசாலையில் உள்ள சிட்கோ பணிமனையில் போக்குவரத்துக் கழக சம்மேளன உறுப்பினர் கே.நாகராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரத்தில் போக்கு வரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.