districts

img

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ரத்த வகையால் ஏற்படும் தடைக்கு தீர்வு

சென்னை,மே 18  சென்னையில் 45 வயதான நோயாளி ஒருவருக்கு ஓரே ரத்த வகையைச் சாராத உயிருடன் உள்ளவரிடமிருந்து கல்லீரல் தானமாகப் பெற்று வெற்றி கரமாகப் பொருத்தி கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சூளைமேடு எம்ஜி எம் ஹெல்த்கேர் மருத்துவ மனையில் சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த அறுவைசிகிச்சையை டாக்டர் தியாகராஜன்  ஸ்ரீநிவாசன் தலைமையில் டாக்டர்கள் கார்த்திக் மதிவாணன், மயக்கவியல் மூத்த மருத்துவர்கள் டாக்டர் தினேஷ், டாக்டர் நிவாஷ் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய குழு செய்தது. ஏபிஓ ரத்தக்குழு என்பது ஒன்றுக்கு ஒன்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்காது. குறிப்பாகச் சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையின் போது தானமாகக் கொடுப்பவர் மற்றும் தானம் பெறுபவரின் ரத்த வகை மாறு பாடு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. ரத்த வகை ஆன்டிபாடி அப்சார்ப்ஷன் (glycosorb) கருவி என்ற புதிய தொழில்  நுட்பத்தை பயன்படுத்தி எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவர்கள் இதற்குத் தீர்வு கண்டுள்ளனர்.  கேரளாவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணனுக்கு இந்த தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து டாக்டர் தியாகராஜன் ஸ்ரீநிவாசன்  கூறுகையில், “ கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை எதிர்நோக்கியிருக்கும் பலருக்கு நம்பிக்கையையும் மிக விரைவாக நலம் பெறுவதற்கான வாய்ப்பையும் இந்த அறுவை சிகிச்சை  வழிவகுத்துள்ளது என்றார். ரத்தத்தில் உள்ள ரத்த வகை ஆன்டிபாடிகளை மட்டும் உறிஞ்சி எடுக்கும் புதிய தொழில்நுட்பத்திலான  கருவியால்  மிகச்சிறந்த முடிவு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.