கடலூர், ஜூன்.11-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகியும் மகளிர் சட்ட உதவி மையம் பொறுப்பாளருமான எஸ். மனோன்மணியின் தாயார் அஞ்சலை அம்மாள் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் காலமானார்.
அவரது உடலுக்கு கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், கடலூர் மாநகரச் செயலாளர் அமர்நாத், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் தண்டபாணி, மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் மாதவி, மாநில செயற்குழு உறுப்பினர் மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் சிவகாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முரளி, முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.