எஸ்.கண்ணன் பேச்சு சென்னை, ஆக.29- விலைவாசிக்கேற்ற ஊதியம் உயர்ந்துள்ளதே தவிர, உழைப்பிற்கான உண்மை மதிப்பு உயர வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி குழு அலு வலக திறப்பு விழா ஞாயி றன்று (ஆக.27) வானகரத் தில் நடைபெற்றது. அலுவல கத்தை திறந்து வைத்து எஸ். கண்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: அமெரிக்க ஏகாதிபத்தி யமும், வகுப்புவாதமும் ஒன் றுக்கொன்று உதவியாக இருக்கிறது. ஏகாதிபத்தி யம் சரிவடையும்போது, வகுப்புவாதம் அதற்கு முட்டு கொடுக்கிறது. எனவே, ஏகாதிபத்தியத்திற்கும், வகுப்புவாதத்திற்கும் விலை வாசி உயர்வு, மக்களை பற்றி கவலையில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 110 டாலராக இருந்தபோது பெட்ரோல் 70 ரூபாய்க்கு கிடைத்தது. இன்றைக்கு 70 டாலராக குறைந்துள்ள நிலையில் 50 ரூபாய்க்கு கிடைக்க வேண்டும். மாறாக, 110 ரூபாய் அளவுக்கு விற்று ஒன்றிய அரசு 65 ரூபாய் கொள்ளை யடிக்கிறது. சமையல் எரிவாயுவை 2014ம் ஆண்டு விலையை விட குறைவாக கொடுத்திருக்க முடியும். ஒன்றிய அரசு அதனை செய்ய மறுக்கிறது.
முதலாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் தேங்கினாலும் விலை குறைவதில்லை. விவசாயி கள் அதிகம் உற்பத்தி செய்தால் அந்த பொருட் களின் விலை வீழ்ச்சியடை கிறது. முதலாளித்துவம் நுட்பமான கட்டமைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் விலைவாசி 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. எனவே, 6 விழுக்காடு ஊதி யம் தருவதாக கூறுகிறார் கள். உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு உண்மை ஊதியத்தை உயர்த்தாமல், ஊதியத்தை குறைப்பதற்கான அத்தனை வகையான உத்திகளையும் முதலாளித்துவம் கையாள் கிறது. விலைவாசிக்கு ஏற்ற ஊதியம் தான் உயர்ந் துள்ளது. உழைப்பின் உண்மை மதிப்பு உயர வில்லை. சீனாவில், உண்மை ஊதியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத் தால்தான், உலகளவில் ஓரளவிற்கு ஊதியம் உயர்ந்துள்ளது. வேலை யில்லா திண்டாட்டம் அதிக மாக இருப்பதால், உண்மை ஊதியம் உயராமல் உள்ளது. நியாயவிலைக் கடைக ளில் மக்களுக்கு விலை யில்லா பொருட்கள் வழங் கப்படுகின்றன. இந்தப் பொருட்கள் அதிகம் தேவைப்படுவோருக்கு கூடுதலாக வழங்க வேண் டும் என்று கோர வேண்டி உள்ளது. விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும், உழைப்பிற்கான உண்மை ஊதியத்தை வழங்க வேண்டும், வேலை யின்மைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 மறியல் போராட்டத்தில் பெருந்திரளாக மக்களை அணிதிரட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் பேசினர்.