districts

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திட்டக்குடி

கடலூர்,ஜூன் 22-

      கடலூர் மாவட்டம், திட்டக்குடிநகராட்சியில் விருத்தாசலம் ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் நாள் தோறும்ஆயிரக்கணக்கில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், சைக்கிள், செல்வோர் எனபொதுமக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.  

    திட்டக்குடி நகராட்சியில் மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளது. இதன் வழியாகசெல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அன்றாடம்விபத்துகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்வது வாடிக்கையாக உள்ளது.  

    சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சாலையில் வரும் பொழுது உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்துநெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது. திட்டக்குடியில் போக்கு வரத்துகாவலர்கள் நியமனம் தேவை என கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறைகோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து காவல் துறையினரைநியமனம் செய்து போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கட்டுப்படுத்தினால் ஓரளவு விபத்துக்கள் குறையும்.

      மேலும் திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக செட் அமைப்பதாககூறி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கு எந்த முன் ஏற்பாடுகள்செய்யாமல் நகராட்சி விருப்பத்தின்படி இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. பணிகளை துரிதப்படுத்த விரைந்து முடித்தால் அனைத்து பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.  

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்துபணிகளை விரைந்து முடித்து பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லவழிவகை செய்ய வேண்டும்.