சென்னை, செப்.2 - சென்னையில் ஞாயிறன்று (செப்.4) 35வது கோவிட் மெகா தடுப்பூசி முகாம் 2000 மையங்களில் நடைபெற உள்ளது. இதன்படி, ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) வீதம் 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு வார்டிற்கு 5 வீதம் ஆயிரம் சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.