districts

img

கடலூர், சிதம்பரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் ரயில் மறியல்

கடலூர், மார்ச்.2- கடலூர்  மாவட்டத்தில் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திருப்பாதிரிப்புலியூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலை யங்களில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பாக எழுச்சி மிக்க ரயில்மறியல் போராட்டம் சனிக்கிழமை (மார்ச் 2) நடை பெற்றது. திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே நிலையத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் துறைமுகம் ஜங்ஷன் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை, குடிநீர், கழிவறை, சைக்கிள் ஸ்டாண்ட், இரவு நேரங்களில் பஸ் வசதி ஏற்படுத்த கோரியும், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்கு இரவு 9 மணி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,  மன்னார்குடி, மஹால் விரைவு வண்டி கடலூரில் நின்று செல்ல வேண்டும். ரயில்களை நீடித்திடுக  சேலம்- விருதாச்சலம், விழுப்புரம்- தாம்பரம் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய  வேண்டும், மயி லாடுதுறையிலிருந்து கோவை மைசூர் செல்லும் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும், சென்னை காரைக்குடி புதிய ரயில் விரைந்து இயக்கிட வேண்டும், கடலூர்- புதுவை- சென்னை இருப்பு பாதைத்திட்டத்தை  நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் திமுக கூட்டணி கட்சியினர், குடி யிருப்போர் அமைப்பு பொதுநல அமைப்புகளின் சார்பில்  ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. பேரணியாக சென்று சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார்  திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநகர செயலாளர் ஆர். அமர்நாத், செயற்குழு உறுப்பி னர் வி. சுப்புராயன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் திலகர், மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் துணைச் செய லாளர் குளோப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளு மன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாநில நிர்வாகி ஸ்ரீதர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் லெனின், திராவிட கழக மாவட்ட செயலாளர் எழிலேந்தி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரஹீம், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் எம்.மருத வாணன், செயலாளர் பி.வெங்க டேசன், பொதுநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி, தனியார் பேருந்து சங்க தலைவர் குரு.ராமலிங்கம், மீனவர் பேரவை தலைவர் சுப்ப ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சிதம்பரம், மார்ச் 2-   பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறி யலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறை -கோவை  சதாப்தி ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறை - மைசூர் ரயில் சிதம்பரம் வழியாக கடலூர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சாரதா - சேது மற்றும் கம்பன் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். விழுப்புரம்- மயிலாடுதுறை தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். சிதம்பரம் வழியாக இயக்கப்பட்ட தாம்பரம் செங்கோட்டை ரயில் தற்போது மயிலாடுதுறை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனை மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டும். ரயில் நிலைய நடைமேடை களுக்கு பயன்படுத்தப்படும் மேம்பாலத்தினை கிழக்குப் பகுதி வரை நீட்டிக்க வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பார்சல் புக்கிங் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.  திருச்செந்தூர்,  பாமணி & மீனாட்சி விரைவு ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தி சிதம்பரம் ரயில் நிலை யத்தில் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்னர்.   அப்போது ரயில் நிலையம் நுழைவு வாயில் முன்பு  சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பி.ரகுபதி  தலைமையில் காவல்துறையினர்  அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் வரும்போது 10 பேரை மட்டும் நடை மேடை வரை அனுமதித்தனர். அவர்கள் மத்திய மோடி அரசையும் ரயில்வே நிர்வாகத்தையும் கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் முழக்கமிட்டனர்.  இதற்கு ஆதரவு தெரிவித்த ரயில் பயணிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களை  காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா,  நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், சிபிஎம் நகர்குழு உறுப்பினர்கள்.  ரயில் பயணிகள் நல சங்கம் அப்துல் ரியாஸ், ஏ.சிவராம வீரப்பன், அம்பிகாபதி, பரங்கிப்பேட்டை ரயில்பயணிகள் சங்க அருள்முருகன், இந்திய மாணவர்சங்க செயற்குழு உறுப்பினர் சௌமியா  உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.