districts

முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம், அக். 30- முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அதிகாரி களுக்கு ஆட்சியர் மோகன் உத்தர விட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடு களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடை பெற்று வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மோகன் தலை மையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2023-24ஆம் ஆண்டிற்குள் குடிநீர் இணைப்பு வழங்கி ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான, பாதுகாப்பான குடிநீர் விநி யோகிப்பது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். குடிநீர் விநியோகத்தில் மக்கள் ஒவ்வொருவரின் பங்கினை உருவாக்கிடும் வகையில் திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்ட பங்களிப்பு தொகையை பெற்று பொதுமக்களையும் திட்ட செயல்பாட்டில் ஈடுபடுத்தி இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக பங்களிப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்க ளில் பணி மதிப்பீட்டில் 5 விழுக்காடு சமூக பங்களிப்பு தொகையும், இதர கிராமங்க ளில் 10 விழுக்காடு சமூக பங்களிப்பு தொகை யும் வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 84 ஊராட்சிகளில் மொத்தம் 36,234 வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.30.23 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள 35,458 முறையற்ற குடிநீர் இணைப்பு களை முறைப்படுத்திடவும், அதற்கான வைப்பு தொகையை வசூல் செய்திட வும், முறைப்படுத்தப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான ஆதார் விவ ரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். முறையற்ற குடிநீர் இணைப்பை முறைப்படுத்த முன்வர தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.