இந்தோனேசியா நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்து அதற்கு பதிலாக கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கான பண்டமாற்று பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாடுகளும் விரைவில் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவுக்கு இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படும் என்றும் இதன் காரணமாக மீண்டும் பழைய விலைக்கு சமையல் எண்ணெய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.