பூந்தமல்லி, ஜன. 6- பூந்தமல்லி அருகே உள்ள மாங்காடு நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. மாங்காடு நகராட்சிக்குட் பட்ட ஜனனி நகர், ஸ்ரீநிவாசா நகர், ஸ்ரீசக்ரா நகர், பத்மா வதி நகர், அப்பாவு நகர், வீர ஆஞ்சநேயர் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 அடிக்குமேல் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை வெள்ள பாதிப்பால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ள தாக அப்பகுதி மக்கள் வேத னையுடன் தெரிவிக்கின்ற னர். மேலும் தேங்கி நிற்கும் மழை வெள்ளம் வெளியேற முறையான வடிகால்வாய் வசதி இல்லாத காரணத் தால் ஒவ்வொரு மழைக்கும் மழைநீர் தேங்கி நிற்பதாக வும், மழையின் போது ராட்சத மோட்டார்கள் கொண்டு நீரை வெளியேற்றும் நகராட்சி அதிகாரிகள், முறையான வடிகால்வாய் கள் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.