சென்னையில் தலித் மாணவி ரேகாவை சித்ரவதை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திட வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வழங்கிட வலியுத்தியும் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு பெரியார் சிலை அருகில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சதிஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கையை விளக்கி மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மு.தமிழ்பாரதி உள்ளிட்ட பலர் பேசினர்.