districts

img

மாமல்லபுரத்தில் ஒளிரும் தோட்டப்பணிகள்

காஞ்சிபுரம், நவ.23 - சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக மாமல்லபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள ஒளிரும் தோட்டம் மற்றும் லேசர் ஒலி, ஒளி காட்சி பணிகளை சுற்றுலாத்துறை ஆணையர் காக்கர்லா உஷா ஆய்வு செய்தார். மும்பை சன்வின் நிறுவனத்தினர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து அரசு, தனியார் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டத்தை அமைக்க உள்ளனர். இந்த பூங்காவில் ஒளிரும் விலங்குகள், வண்ண வண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், செல்பி புகைப்படம் எடுக்கும் இடங்கள் அமைய உள்ளது. அதேபோல் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் அர்ச்சுணன் தபசு சிற்பங்களை வரலாற்று தகவல்களுடன் அறிந்து கொள்ள ரூ.5 கோடி செலவில் லேசர் ஒலி, ஒளி காட்சி அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து  மாமல்ல புரம் வருகை தந்த தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் காக்கர்லா உஷா மொத்தம் ரூ.13 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.