திருவள்ளூர், மே 9- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் ஏனம்பாக்கம் ஊராட்சியில் இருளர் இனத்தை சேர்ந்த 21 குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு பட்டா உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளை யும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன. போராட்டங்களின் விளைவாக இம்மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு குழாய், ஒரு மின் கம்பம், ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் பொருத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக குடும்பத்திற்கும் ஒரே மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து குடும்பங்களும் இருளில் வாழக்கூடிய நிலை உள்ளது. இந்த சூழலில் 2022 ஜூன் மாதத்தில் 14 குடும்பத்திற்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. பட்டாக்கள் பெற்ற பயனாளிகளுக்கு இதுவரை வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக் காததால், பட்டா வழங்கியும் அதன் பயனை அனுபவிக்க முடியாமல் உள்ளனர். அரசு நலத்திட்டங்களும் எதுவும், அந்த மக்களை இதுவரை சென்றடைய வில்லை
. பழங்குடி இன மக்களுக்கு என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதிகள் எங்கு செல்கின்றன என்ற கேள்வியை பொது மக்கள் எழுப்புகின்றனர். குடும்ப அட்டை இல்லாத தால் ரேசன் கடையில் விலை யில்லாமல் வழங்கும் அரிசியை, வெளிச்சந்தை யில் காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள் ளனர். சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களை ஆற்றங் கரையில் புதைக்கும் அவல நிலை நீடிக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் இல்லாததால் குடும்பத் தலைவிகள் நுண்நிதி நிறுவ னங்களின் வட்டிக்கடன் வலையில் சிக்கிக் கொள் கின்றனர். மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் பலனில்லை என்கின்றனர்.பட்டாவை அளந்து அளவீடு செய்ய வேண்டும், பட்டா கிடைக்காமல் விடுபட்ட இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், பட்டா வழங்கிய வர்களுக்கு பசுமை வீடு கள் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களை உரு வாக்க வேண்டும்,போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி திங்களன்று (மே-8) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு, பகுதி நிர்வாகி பி.முனுசாமி உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்