திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி அப்துல்காதர் ஷெரிப் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி, நகரச் செயலாளர் தயாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், தாலுகா செயலாளர் அப்துல்காதர், டி.எம்.பீர்முகமது (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), முனுசாமி (சிபிஐ), அப்துல்கலீம் (இந்திய தேசிய காங்கிரஸ்), இனியவன், எம்.விஜய் (விசிக), சாதிக்பாஷா (சிபிஐஎம்எல்), தொழிலதிபர் ஏ.ஜெ. இஷாக் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.