சென்னை, செப்.11 - பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி செவ்வாயன்று (செப்.11) ஷெல் ஸ்டோர் கேட் அருகே ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஒய்வூதிய திட்டம் (யுபிஎஸ்), தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) ஆகிய இரண்டையும் கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஐசிஎப்-ல் உள்ள 2300 காலியிடங்களை நிரப்ப வேண்டும், உச்சவரம்பு இன்றி உற்பத்தி உயர்வுக்கு ஏற்ப போனசை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், 8 ஆவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் சி.சத்தியமூரத்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தெற்கு ரயில்வே ஓய்வூ தியர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.இளங் கோவன், யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், இணைப் பொதுச்செய லாளர் சாண்டில்யன் மற்றும் தோழமைச் சங்க தலைவர்கள் எஸ்.மங்காராமன் (எஸ்சி,எஸ்டி தொழிலாளர் சங்கம்), ராமமூர்த்தி (ஏஐஓபிசி), கே.வி.ரமேஷ் (ஐஆர்டிஎஸ்ஏ), ராஜ்குமார் (ஏஐஆர் எம்எஸ்ஏ) உள்ளிட்டோர் உரையாற்றினர்.