தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஓசூர் வட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பழ.பாலசுந்தரம் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் பெரியசாமி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். இணைச் செயலாளர் தணிகாச்சலம் நன்றி கூறினார். எழுத்தாளர் கமலாலயன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளர் "மண்குடம்" மாதவராஜ் "தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை" எனும் தலைப்பில் பேசினார். இணைச் செயலாளர் தணிகாச்சலம் நன்றி கூறினார்.