தோழர் ப.ஜீவானந்தம் நினைவு தினமான வியாழனன்று (ஜன.18) தாம்பரத்தில் அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆதி மாறன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மலர்விழி, தாம்பரம் தலைவர் பி.சீனிவாசன், தொழிற்சங்க தலைவர்கள் எஸ்.அப்பனு, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஐ மாநில நிர்வாகிகள் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஆர்.சாந்தி, மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், தாம்பரம் செயலாளர் ஏ.பாலாஜி, சிபிஎம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.