districts

img

சென்னையில் ஹோலி கொண்டாட்டம்

சென்னை, மார்ச்18-  சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டா டப்பட்டது. ஹோலி பண்டிகையை யொட்டி வெள்ளியன்று  சென்னையில் கொண்டாட் டங்கள் உற்சாகமாக களை  கட்டியது. வட மாநிலத்த வர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று திரண்ட னர். அப்போது கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவினர். இந்த கொண்டாட்டத்தின் போது தங்களது நண்பர்கள், உறவினர்கள் பலரையும் வீட்டுக்கு அழைத்திருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களை வரவேற்கும் விதமாக ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத் தில் ஈடுபட்டனர். சகோதரத் துவத்தை உணர்த்தும் வகையில் பல ஆண்டுக ளுக்கு முன்பில் இருந்தே ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதா கவும் கருத்து நிலவுகிறது. ஹோலி கொண்டாட்டம் காரணமாக சென்னை மாந கரின் பல பகுதிகள் வண்ண  மயமாக காட்சி அளித்தன.