திருவள்ளூர் , நவ.10- வில்லிவாக்கம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை துவக்கி கொடியேற்றி, பெயர் பலகை வியாழனன்று (நவ 9), திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர்கள் ஏ.வி.சண்முகம், இ.கங்காதுரை, மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட பொருளாளர் எஸ்.குமரவேல், கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ெஜ.இராபட் எபிநேசர், மாவட்டக்குழு உறுப்பினர்இராமசாமி, கிளை தலைவர் கே.ஆர்.மூர்த்தி, செயலாளர் சுபஸ்ரீ,பொருளாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.