தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 6ஆவது மாநாட்டையொட்டி வந்தவாசியில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மலைவாழ் மக்கள் செங்கொடி ஏந்தி பாரம்பரிய நடனங்களுடன் அணிவகுத்து வந்தனர்.
மின் வாரியத்தில் வருவாய் மேற்பார்வையாளர் பதவிக்கு மாறுதல் வழங்குவதில் விதிகளை மீறி பாரபட்சமாக நடந்து கொண்ட நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரத்தில் மின் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திட்டச் செயலாளர் ஆர்.சேகர், திட்ட துணைத் தலைவர் எம்.புருசோத்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.