districts

img

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

கள்ளக்குறிச்சி,அக்.25- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய் துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் புதனன்று (அக்.25)  நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவல கங்களில் விண்ணப்பித்த 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க பய னாளிகள் தேர்வு முகாம் தனித்துணை ஆட்சியர் சமூக பாது காப்பு அலு வலர் ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, அரசு எலும்பு முறிவு மருத்துவர் பால சுப்பிரமணி, கண் மருத்துவர் காயத்ரி, மனநல மருத்துவர் உஷா நந்தினி, காது, மூக்கு, தொண்டை மருத்து வர் வாசவி கலந்து கொண்டு 156 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கலந்து தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் சக்கர நாற்காலி கோரிய இரண்டு மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு ரூ.18000 மதிப்புள்ள சக்கர நாற்காலிகளை தேர்வுக்குழு வழங்கினர்.