வைரஸ் தொற்று எதிரொலி: வண்டலூர் பூங்கா மூடல்
சென்னை, ஜன. 15 - கோவிட் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஜன.17 முதல் 31ந் தேதி வரை பொதுமக்க ளுக்கு மூடப்படுகிறது. ஜன.31 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப முடிவு எடுத்து அறி விக்கப்படும் என்று பூங்கா இயக்குநர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார். 87 பேருக்கு தொற்று இங்கு பணியாற்றும் 300க்கும் மேற்பட்டோருக்கு மேற்கொண்ட பரி சோதனையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விலங்குகளின் பாது காப்பு கேள்வி குறியாகியுள்ளது.
நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம்
சென்னை,ஜன. 15 - அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் திங்கட்கிழமை (ஜன.17) முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தெற்கு மண்டல கட்டுப் பாட்டில் உள்ள நியாய விலைக் கடை கள் ஜன.17ந் தேதி காலை 7 மணி முதல் செயல்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள், கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்ற அரசு செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
எஸ்.துரைராஜ் மறைவு: முதலமைச்சர் இரங்கல்
சென்னை, ஜன. 15 - பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்துள்ளார். “மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரை ராஜ் உடல்நலக் குறைவால் மறை வுற்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை யடைந்தேன். இடதுசாரிப் பார்வையும் மனிதநேயப் பற்றும் கொண்டிருந்தவர் துரைராஜ். எளிய மக்களின் உரிமைகள் மற்றும் ஏற்றத்துக்கான கருவியாக தன் பணியைப் பயன்படுத்திக் கொண்டார். பல்வேறு பத்திரிகையாளர் அமைப்பு களிலும் பொறுப்பு வகித்த அவர், அடக்கு முறைகளுக்கு எதிரான தனது செயல்பாடு களுக்குப் பெயர் பெற்றவர்” என்று குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.15 கோடி அபராதம்
சென்னை, ஜன. 15 - சென்னையில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து கடந்த 8 நாட்களில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆவது அலையைக்காட்டிலும் 4 மடங்கு வேகமாக தற்போது பரவி வரு கிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் காவல்துறையினர், சுகா தாரத்துறையினர் முகக்கவசம் அணி வதன் கட்டாயம் குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். ரயில்கள், பேருந்துகள், சந்தைகள் உள்ளிட்டு பொதுமக்கள் கூடும் இடங்கள் இடங்களில் முகக்கவசம் அணி யாதவர்களிடம் அபராதம் வசூ லிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாத வர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 8 நாட்களில் சென்னையில் முகக் கவசம் அணியாத 18,819 நபர்களிடமிருந்து 1 கோடியே 15லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ‘‘பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றுபவர்க ளிடம் அபராதம் வசூலிப்பது கடுமை யாக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொங்கல் பண்டிகையான ஜன.14ந் தேதியன்றும் முகக்கவசம் அணி யாதவர்களிடம் அபராதம் வசூ லிக்கப்பட்டது. இதன்படி, 4,962 பேரிடம் இருந்து 9 லட்சத்து 92 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்க அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகையை அபராதமாக வசூலிக்க தொடங்கவில்லை. இன்னும் சில தினங்களில் முறையான உத்த ரவு கிடைத்ததும் 500 ரூபாய் அப ராதம் வசூலிக்கப்படும்” என்று தெரி வித்துள்ளனர்.
கோவிட் பரிசோதனை செய்பவருக்கு இன்று முதல் ‘மருத்துவத் தொகுப்பு’
சென்னை, ஜன. 15 - கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, முடிவுக்காக காத்திருப்போருக்கு மருந்துகள் அடங்கிய ‘மருத்துவ தொகுப்பு’ வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு மாநக ராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகா தார மையங்கள் மற்றும் நகர்புற சமுதாய நல மருத்துவமனைகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து தடவல் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளும் நபர்கள் பரி சோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய நேரங்களில் தனிப்படுத்திக் கொண்டோரின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகை யில்லும் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு ஜன.16 முதல் வழங்கப்படவுள்ளது. இந்த தொகுப்பில் வைட்டமின் சி, ஜின்க், பாராசிட்டமால் ஆகிய மாத்திரைகள், கபசுரக் குடி நீர் மற்றும் மூன்றடுக்கு முகக்கவச ங்கள் போன்ற இருக்கும். மருத்து வர்கள் பரிந்துரைக்கும், தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் அசித்ரோமைசின் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை கள் வழங்கப்படும். மாநகராட்சியால் வழங்கப்ப டும் மருந்து தொகுப்பிலுள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சியின் தொலைபேசி ஆலோசனை மையங்களில் ஆலோசனை பெற்று முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றமா? சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்
புதுச்சேரி, ஜன. 15- புதுச்சேரியில் 2 ஆண்டுக்கு முன்பு கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அங்கு கொரோனா நோயாளிகள் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 2ஆவது அலையின்போது அதிகளவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. காசநோய் மருத்துவமனையிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. புதுவை அரசு மருத்துவமனையில் க ரோனா வார்டு மட்டும் அமைக்கப்பட்டி ருந்தது. அதோடு பிற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. படிப்படி யாக தொற்று குறையத் தொடங்கியதால் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. புதுவையில் கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படவில்லை. பாரதி பூங்கா அருகில் உள்ள அரசு மருத்துவ மனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளி களை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகளிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கடந்த காலத்தைபோல கதிர்காமம் மருத்துவமனையை கொரோனா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறியதாவது: கோரிமேடு காசநோய் மருத்துவமனை யில் 180 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு தற்போது 30 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள படுக்கைகள் காலியாக உள்ளது. கடந்த காலத்தை போல அரசு மருத்துவமனையிலும் கொரோனா வார்டு உருவாக்கி உள்ளோம். இங்கு 160 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. அவசர சிகிச்சை பிரிவும் இயங்குகிறது. பிற நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் கொரோனாவுக்கு இருவர் பலி
புதுச்சேரி, ஜன. 15- புதுவையில் 2 ஆயி ரத்து 344 பேருக்கு கொ ரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 1,213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புது வையில் 1,100, காரைக்கா லில் 93, ஏனாமில் 3, மாகி யில் 17 பேர் புதிதாக தொற்று டன் சிகிச்சை பெற்று வரு கின்றனர். புதுவையில் 82, காரைக்காலில் 20, ஏனாமில் 3, மாகியில் 18 பேர் என 123 பேர் தொற்றுடன் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இப்போது 6,785 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாகியில் 2 பேர் கொரோனா சிகிச்சை பல னின்றி இறந்தனர். இத னால் மாநிலத்தில் கொ ரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. புதுவை யில் 2ஆவது தவணை உட்பட 14 லட்சத்து 95 ஆயிரத்து 877 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
விபத்தில் மருத்துவர் உட்பட 2 பேர் சாவு
கள்ளக்குறிச்சி, ஜன. 15- திருப்பூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். அவரது மனைவி கற்பகம் (48) பல் மருத்துவர். இவர்களது மகள் கவின் மலர் (20) பல் மருத்துவம் 4ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு மருத்துவர் கற்பகம், மகள் கவின்மலர் தனது தாயார் டாக்டர் உமாராணி (81) ஆகியோரை அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருந்து விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றார். காரை கற்பகம் ஓட்டினார். கார் கள்ளக்குறிச்சி அருகே பெரியமாம்பட்டு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி காவலாளி சக்கரை (65) மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மருத்துவர் கற்பகம், கவின் மலர், உமா ராணி, காவலாளி சக்கரை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள்,உமாராணி, சக்கரை ஆகிய 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் காயம் அடைந்தகற்பகம், கவின்மலர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தியாக துருகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயிலில் கிடந்த பச்சிளம் குழந்தை
கிருஷ்ணகிரி , ஜன. 15- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே குழந்தை அழுகை சத்தம் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. இதையறிந்த பொது மக்கள் அங்கு சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் பாருர் காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த குழந்தையைக் கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் கிருஷ்ணகிரி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வீசிச்சென்றது யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுரங்கவியல்: தரவரிசை வெளியீடு
சிதம்பரம், ஜன. 15- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சுரங்கவியல் பட்டயப்படிப்பு நடத்தி வருகிறது. இதற்கான தரவரிசைப் பட்டி யலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசன், பொதுவான 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலையும், பழுப்புநிலக்கரி நிறுவனத்தின் 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலையும் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன், பேராசிரியர் ராம்குமார், சேர்க்கை ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காட்டுப்பன்றி வேட்டை: 2 பேர் கைது
திருவண்ணாமலை, ஜன. 15- திருவண்ணாமலை மாவட்ட வனபாதுகாப்பாளர் சுஜாதா அறிவுரையின் பேரில் வனச்சரகம் சீனிவாசன் தலைமையில் வனக்குழுவினர் சனிக்கிழமை காலை வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கண்ணமடை காப்புகாடு, நாச்சியந்தல் பகுதியில் 2 மர்ம நபர்கள் காட்டுபன்றி இறைச்சியை சுட்டு பொட்டலமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வனக்குழுவினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பொலக்குடியை சேர்ந்த விஜயகாந்த் (எ) சிங்கம் (34), நாச்சியந்தலை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்று தெரியவந்தது.. அவர்களை வனக்குழுவினர் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 7 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பொலக்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலை, ஜன. 15- திருவண்ணாமலையில் வரும் 17, 18 தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 1973ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144இன் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. மேலும் வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினமான ஜனவரி 17ஆம் தேதி காலை 4.14 மணி முதல் ஜனவரி 18ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.