districts

பண்ருட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கடலூர், மே 21-

   பண்ருட்டி அடுத்த திருவாமூர், எலந்தம்பட்டு ஆகிய கிராமங்களில் சிலர் வீடுகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புதுப்பேட்டை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவாமூரில் உள்ள ஒரு வீட்டில் சிவக்குமார் (20), பெரிய எலந்தப்பட்டு ராகுல் (22) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 85 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

   அதேபோல முத்தாண்டி குப்பம் காவல் துறையினர் நடத்திய சோதனையில் கீழக்குப்பம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்க பாண்டியன் (20) அந்த பகுதியில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.