சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தை மூடும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், அச்சகத்தை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டிஆர்இயூ பொதுச்செயலாளர் வி.அரிலால், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியை சந்தித்து மனு அளித்தார். அப்போது இணை பொது செயலாளர் அ.வெங்கட்ராமன், துணை தலைவர் பேபி ஷகீலா ஆகியோர் உடன் இருந்தனர்.