மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.ஜான் வீடு வீடாகவும், வணிகர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதில் திமுக பகுதிச் செயலாளர் பேபி சேகர், வட்டச் செயலாளர் உதயகுமார், வட்ட பொறுப்பாளர் துருவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 3 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வேட்பாளர் வி.ஆர்.லட்சுமணன் பஜார் பகுதியில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்.உடன் எம்.சி.சீனு, துலுக்கானம் ஆகியோர் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 4 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வி.குப்புசாமி கோட்டக்கரை பகுதியில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்தார் இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் வட்டச்செயலாளர் இ.ராஜேந்திரன், வட்ட குழு உறுப்பினர் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி 148ஆவது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.வெள்ளைச்சாமி புதனன்று (பிப்.16) மூகாம்பிகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சி 2வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.முத்துவை ஆதரித்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் ஓதியூர், முட்டுக்காடு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன், க.புருசோத்தமன், க.பகத்சிங்தாஸ், வட்டச் செயலாளர் எஸ்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்பாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் நகராட்சியில் 12 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் மு.சூரியபாரதி வீடுவீடாக சென்று சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்க்கு சி.எஸ்.எம் தோப்பு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.