ராணிப்பேட்டை, செப். 24 - கைத்தறி பட்டு நெசவாளர் சங்க கிளை அமைப்பு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் பகுதியில் அ. ஜம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் அ. தவராஜ், சிபிஎம் கலவை வட்டார செயலாளர் எஸ். கிட்டு, கிளைச் செயலாளர் கே. சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த அமைப்பு கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் மானிய கடன்கள் வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணங்கள் கால தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளையின் தலைவராக ஜி. ராஜசேகர், செயலாளராக பி.தேவன், பொருளாளராக பி. கோபு தேர்வு செய்யப்பட்டனர்.