ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உபகரணங்கள் வழங்கும் முகாம் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவர் கௌதமன் ஒன்றியக்குழு உறுப்பினர் ஷீலா தணிகாசலம், சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.தாட்சாயணி, எம்.வெள்ளிகண்ணன், ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் நிர்வாகி ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.