திருவள்ளூர், நவ 24- திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24 அரைவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தியை வெள்ளியன்று (நவ 24) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கரும்பு அரைவை பணிகளை தொடங்கி வைத்தார். நடப்பு பருவத்தில் 2.50 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜெ.மலர்விழி, திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சுஜாதா மகா லிங்கம், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.