விழுப்புரம், ஜூலை 3- விழுப்புரத்தில் வரு கின்ற 6 ந்தேதி நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு தினத்தை, குறை தீர்ப்பு தினமாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சங்கத்தின் விழுப்புரம் மாவட்டகுழு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலருக்கு அனுப்பட்டுள்ள மனுவில், வருகின்ற 06.06.2022. நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு தினத்தை குறை தீர்ப்பு தினமாக நடத்திட வேண்டு கிறோம். அங்கு மனுக்கள் வரிசைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகளை சங்க பிரதி நிதிகள் பேச வாய்ப்பளிக்க வேண்டும், கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கட்டா யம் பங்கேற்க வேண்டும், மேலும் வருவாய் துறை, காவல் துறை, அதி காரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை அலு வலர்கள் பங்கேற்க செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலஅரசின் ஆணை யின் படி மாற்றுத் திறனாளிகள் குறைதீர்ப்பு தினத்தை மாவட்ட ஆட்சியர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பலமுறை முன்வைத்துள் ளோம்.
அதனை நிறை வேற்றும் வகையில் 6.7.2022ல் குறைதீர்ப்பு தினத்தை நடத்துவதாக அறிவித்துள்தற்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றோம். இந்த கூட்டத்தில் 21 வகையான ஊனங்களை ஆய்வு செய்ய தகுதியான மருத்துவர்கள், ஊரக-உள்ளாட்சி அதிகரிகள் ஆகி யோர் பங்கேற்க செய்ய வேண்டும். மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்பின் தலை வர்கள் பங்கேற்க அழைக்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவைகள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்படவேண்டும். குடி நீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ள இடமாகவும் , மாற்றுத்திறனாளிகள் எளிதில் கலந்து கொள்ளும் இடமாகவும் கூட்டம் நடை பெறும் இடம் இருக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.