மோடி, அண்ணாமலை உருவங்கள் பொறித்த வாழ்த்து அட்டைகள் பறிமுதல்
சென்னை, ஏப். 12- சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி, அண்ணா மலை, வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கை யில், வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 17 பெட்டி களில் இருந்த வாழ்த்து அட்டைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை பிரிண்ட் செய்த நிறுவனத் தின் பெயரும் வாழ்த்து அட்டைகளில் இடம்பெற வில்லை. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராயப்பேட் டையில் இருந்து கொளத் தூர் பகுதிக்கு வாழ்த்து அட்டைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணா மலையைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் திருநாவுக்கரசிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பாஜக, தேமுதிக சின்னம் பொறிக்கப்பட்ட பனியன் கள், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அடையாறில் மூழ்கி மாணவர் பலி
சென்னை, ஏப். 12- சென்னை ஜாபர்கான் பேட்டை அருகே உள்ள திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார். இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் தனுஷ் (14), அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். தனுஷ், வியாழக்கிழமை தனது நண்பர்களுடன் அங்குள்ள அடையாறில் குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார். இதில் நீச்சல் தெரியாததால் தனுஷ் தண்ணீரில் மூழ்கினார். பின்னர், அடையாறில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ராணிப்பேட்டையில் ரூ. 1.32 கோடி பறிமுதல்
ராணிப்பேட்டை, ஏப். 12 – மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1.32 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றதொகுதிகளிலும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 32 லட்சம் ரொக்கப்பணம் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான இதரபொருட்களும் பறக்கும் படை குழு மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில், மேல்முறையீட்டு குழுவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த காரணத்தினால் ரூ. 51 லட்சத்து 71 ஆயிரத்தி 100 உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக இதுவரை வரப்பெற்ற 15 புகார்களுக்கும், சி.விஜில் செயலி மூலம் வரப்பெற்ற 47 புகார்களுக்கும் உடனடியாக தீர்வுகாணப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ச.வளர்மதி தெரிவித்துள்ளார்.