சென்னை, ஏப். 23- தமிழ்நாட்டில் பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 25 பசுமை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஏப்.25) சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறையின் கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் மெய்யநாதன் தாக்கல் செய்தார். அப்போது,"நெய்யப்படாத கைப் பைகள், நெகிழி கைப் கைப் பைகள், தண்ணீர் பைகள் போன்றவை உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், தடை செய்யப்பட்ட நெகிழி உற்பத்தி பொருட்கள் தயாரிப்பதில் ஈடுபட்ட 170 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு அவை களை மூடவும் மின் இணைப்பை துண்டிக்க வும் உத்தரவுகள் வழங்கப்பட்டன. கால நிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை என்ற சூழ்நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் அதன் பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் அவர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சி என்பது தலை முறை யினரிடம் இருந்து துவங்க வேண்டும். எனவே பசுமை இயக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக 25 பள்ளிகளில் பசுமை இயக்கம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தப் பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் மோட்டார் பயன்படுத்துதல் மழைநீர் சேகரிப்பு உரம் தயாரித்தல் காய்கறி மற்றும் மூலிகை தோட்டங்கள் உருவாக்கு தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோயம்பேடு
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளா கங்கள் ஒன்றான கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது இந்த வளாகம் 295 ஏக்கரில் பரந்து விரிந்து காய்கறிகள் பழங்கள் மலர்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் 3900 கடைகளை கொண்டது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை இணைந்து 25 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றார் அமைச்சர்.