திருவள்ளூர்,ஜூன் 15–
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவபாலன்,(46), என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துாரில் வசித்து வருகிறார். இவருக்கு உஷா (43), என்ற மனைவியும் மாதேஷ் (17), என்ற மகனும் உள்ளனர்.
மணவாளநகர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவன் மாதேஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 573 மதிப்பெண்கள், பிளஸ் 2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி அளவில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.
இந்த மாணவன் தற்போது நீட்தேர்வில் 720க்கு 636 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 99.4350033 விழுக்காடு மதிப்பெண் பெற்று 11,174 இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவன் மாதேஷ் பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
நரம்பியல் மருத்துவம் படித்து சேவை செய்வதையே லட்சியமாக கொண்டுள்ள தாக மாணவர் மாதேஷ் தெரிவித்தார்.