சென்னை,டிச.19- மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற சுகா தாரத் துறை அமைச்சர்ஆய்வு நடத்தினார். அப்போது, அங்குள்ள வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மருத்துவர்கள் மெர்லின், பிராபவதி, கிருத்திகா, அர்ச்சனா பாலாஜி ஆகிய நான்கு பேரின் கையொப்பம் பதிவேட்டில் இல்லாமல் காலியாக இருந்தது. இதனை தொடர்ந்து அந்த நான்கு மருத்துவர்கள் மீதும் துறை ரீதியிலான ஒழுங்கு நட வடிக்கை (17 பி) எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிக்கு உத்தர விட்டார். மேலும் இதை கண்காணிக்காத செங்கல்பட்டு இணை இயக்குநர் மருத்துவர் ரமாமணியை உடனடியாக வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யுமாறு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கு நருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். தண்டிக்கப்பட்ட நான்கு மருத்துவர்களில் இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு 2 நாட்கள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இன்னொரு மருத்து வர் 24 மணி நேர பணியை முடித்து ஓய்விலும், நான்காவது மருத்துவர் தற்செயல் விடுப்பும் எடுத்துள்ளார். வருகைப் பதி வேட்டில் கையொப்பம் இட வேண்டிய இடம் காலியாக இருக்கும் போது, என்ன காரணம் என்று அமைச்சர் பொறுமையாக விசாரித்திருக்க வேண்டும். அதை விடுத்து உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு அதிரடியாக 17 பி நோட்டீஸ் தருவதும், இட மாற்றம் செய்வதும் தமிழக வர லாற்றில் இதுவரை நடந்த தில்லை. எனவே, இதனை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வன்மை யாக கண்டிக்கிறது என்று தலைவர் பெருமாள் பிள்ளை தெரி வித்திருக்கிறார். பெண் மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது தொடருவது, இங்குள்ள ஒட்டுமொத்த மருத்துவர்கள் மனதிலும் கொந்தளிப்பையும், வேதனை யையும் ஏற்படுத்தியுள்ளதால் இந்த பிரச்சனையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, அமைச்சரின் உத்தரவை ரத்து செய்வதோடு, மருத்துவர்களை தொடர்ந்து பழிவாங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.