districts

img

அரசு போக்குவரத்து ஊழியர் மாநாடு சகோதர அமைப்புகளுக்கு ஆதரவு நிதி

சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 ஆவது மாநில மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கைகைளை பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார். பொருளாளர் வி.சசிகுமார் ஆகியோர் முன்வைத்தனர். அப்போது சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் தங்களது ஊழியர் நலனுக்காக மட்டும் போராடுகிற சங்கம் அல்ல. ஒட்டுமொத்த சமூகமும் வளம் பெற உழைக்கின்ற வர்க்க வெகுஜன அமைப்புகளின் கரங்களை வலுப்படுத்துவும், பேரிடர், பெருந்தொற்று காலங்கள் உள்ளிட்ட நேரங்களில் அமைப்புகளுக்கு ஆதரவு நிதிகளை அள்ளித்தருகிற இயக்கமாகவும் திகழ்வதாக தெரிவித்தனர். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் சம்மேளனம் வழங்கிய ஆதரவு நிதி என்கிற வகையில், கொரோனா காலகட்டத்தில் தீக்கதிர் ஊழியர் நிதியாக 5 லட்சத்து 59 ரூபாய், மெட்ரோ போராட்ட நிதியாக ரூ.15 ஆயிரம், ஐ.டி கூட்டத்திற்கு ரூ.10 ஆயிரம், வாலிபர் சங்க திருவண்ணாமலை வீடியோ ரூ.5 ஆயிரம், கூட்டுறவு சம்மேளனத்திற்கு ரூ.20 ஆயிரம், வாலிபர் சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம், தீக்கதிர் தமிழ் நாளிதழுக்கு ரூ.5 லட்சம், அயன்புரம் பள்ளி மாணவர்களுக்கு செல்போன் வாங்க ரூ.4 லட்சத்து 81 ஆயிரத்து 459, திரிபுரா மக்கள் உதவி நிதி ரூ.1 லட்சம், திருவண்ணாமலை மாதர் சங்கத்திற்கு ரூ.15 ஆயிரம், வாலிபர் சங்க இளைஞர் முழக்க இதழுக்கு ரூ.10 ஆயிரம், மதுரை தீக்கதிர் உதவி நிதி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், சாலை போக்குவரத்து சங்கத்திற்கு ரூ.1 லட்சம், காரைக்குடி சண்முகராஜ் உதவி நிதி ரூ.25 ஆயிரம், அயன்புரம் பள்ளி நிதியாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம், மாதர் சங்க கூட்டத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 என மொத்த சகோதர அமைப்புகளுக்கு ஆதரவு நிதியாக ரூ.21 லட்சத்து 54 ஆயிரத்து 18 ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இதில், தீக்கதிர் தமிழ் நாளிதழுக்கு மட்டும் 11 லட்சத்து 50 ஆயிரத்து 59 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.