சிதம்பரம், ஜூலை 5- பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிதாக வகுப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப் பேட்டை வடக்கு ஒன்றியச் செய லாளர் விஜய் தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, பரங்கிப்பேட்டை நகரச் செய லாளர் வேல்முருகன் ஆகியோர் கட லூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணி யனை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அதில் பரங்கிப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்க ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்ப றைகள் இல்லை. கடந்த 2021 - 22 ஆம் கல்வியாண்டில் மட்டும் 1500 மாண வர்கள் பயின்று வந்தனர். இந்த 2022- 23 கல்வியாண்டிலும் 1600க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரு கின்றனர். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 33 பிரிவுகளில் வகுப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது 16 வகுப்பறைகளில் இட நெருக்கடியுடன் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மீதமுள்ள 17 வகுப்பறைகள் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும், மரங்களின் அடியிலும் பாதுகாப்பற்ற சூழலில் பாடம் நடந்து வருகிறது. எனவே, புதிதாக வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்பக் கழிப்பறை களும் கட்டிக்கொடுக்க வேண்டும், குடி நீர் வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.