செங்கல்பட்டு, ஜுன் 19-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40வது ஆண்டு மாநில பிரதிநிதித்துவப் பேரவை வருகின்ற அக்டோபர் 7 அன்று செங்கல்பட்டில் நடைபெற உள்ளது. அரசு ஊழியர் சங்கம் துவங்கப்பட்ட 40வது மாணிக்க ஆண்டில் மாநில பிரதி நிதித்துவ பேரவையை செங்கல்பட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில பிரதிநிதித்துவப் பேரவை சிறப்பாக நடத்திட வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர். கே.பூங்குழலி தலைமையில் ஞாயி றன்று (ஜுன்18) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர். சா.முகமது உசேன் வரவேற்றார். சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மொ.ஞானத்தம்பி, ஆ.பெரியசாமி, கே.பழனியம்மாள், சி.எஸ்.கிரிஸ்டோபர், சி.பரமேஸ்வரி, மு.செல்வராணி, இரா.மங்கள பாண்டியன், அ.சீனிவாசன், ந.வெங்கடேசன், சா.டேனியல் ஜெயசிங், உ.சுமதி, ச.ஹேமலதா, ஆ.அம்சராஜ், சா.கோதண்டபாணி, அ.குபேரன், சங்கத்தின் முன்னாள் மாநில பொரு ளாளர்கள் என்.இளங்கோ, வே.கணபதி, எம்.தங்கராஜ், நிலஅளவை ஒன்றிப்பு முன்னாள் நிர்வாகி அரி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜெ.மத்தேயு, ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் எஸ்.இரவி சந்திரன், அனைத்து துறைவாரி சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கங்க ளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர். ஆ.செல்வம், மாநில நிர்வாகிகள் மு.பாஸ்கரன், தெ.வாசுகி ஆகி யோர் மாநில பிரிதிநிதித்துவ பேரவையின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார்.
வரவேற்பு குழுவின் தலைவராக என்.இளங்கோ, மதிப்புரு தலைவராக வே.கணபதி, நிர்வாககுழு தலைவராக கே.பூங்குழலி, வரவேற்புகுழு செயலாளராக முகமதுஉசேன், ஆலோசகர்களாக கே.அறி, இராமச்சந்திரன், பொருளாளராக வே.விக்டர்சுரேஷ்குமார் ஆகியோர் உள்ளிட்ட பல குழுக்கள் தேர்வு செய்யப் பட்டன.