districts

img

ஆடு வளர்ப்பு திட்ட நிதி முறைகேடு: மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, அக்.29-  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், மருதாடு கிராமம் இருளர் பழங்குடி மக்க ளுக்கு விடியல் திட்டப்படி நட்சத்திர ஆடு வளர்ப்பு வங்கிக் குழுவுக்கு ஆடு கள் வளர்ப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதை கண்டித்து  தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னாவரம் மக ளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.  மாநில பொதுச் செயலாளர் இரா. சர வணன்,  சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர், விவசாயிகள் சங்கம் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.