நிபந்தனையின்றி மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தி திங்களன்று (நவ.20) தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தென்சென்னை கோட்டாட்சியர் அருளானந்தத்திடம், சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எம்.குமார், பொருளாளர் லாரன்ஸ் ஆரோக்கிய சகாயராஜ், எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் மனு அளித்தனர். தாம்பரம் கோட்டாட்சியர் பரிமளா தேவியிடம் தென்சென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணன், விஜயலட்சுமி எம்.சி., நிர்வாகிகள் மாயவன், மைதிலி, சம்பத்குமார், தமீம் பாஷா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.