விழுப்புரம், மார்ச்.13- இசைக் கருவிகள் வாங்கு வதற்காக நிதியுதவி பெற விரும்பும் இசைக் கலைஞர்கள் மார்ச் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கிராமியக் கலைஞர்ர்களை யும், கலைக்கு ழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக் கருவிகள், ஆடை, அணி கலன்கள் வாங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கு நிதியு தவியை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவை புதுப்பித்தவராகவும் இருப்போர் விண்ணப்பிக்கத் தகுதி யுடையவர்கள் 31.3.2022-ந்தேதிபடி, 18 வயது நிரம்பியவராக வும் 60 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.நிதியுதவி பெற விரும்பும் கலை ஞர்கள், உறுப்பி னர்- செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31-பொன்னி, பி.எஸ்.குமார சாமி ராஜா சாலை,சென்னை- 600 028, தொலைபேசி எண்: 044-2493 7471, என்ற முக வரிக்கு சுய முகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான அஞ்சல் தலை ஒட்டியும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.